தமிழ்நாடு

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மே 31 வரை இலவச உணவு

webteam

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் மே 31 வரை இலவச உணவு தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் வேலுமணி அறிவித்துள்ளார்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டது.

இதனிடையே இன்று முதல் அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூலிப்பு என செய்தி வெளியானது. இந்நிலையில் சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் மே 31 வரை இலவச உணவு தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் வேலுமணி அறிவித்துள்ளார்.