தமிழ்நாடு

மது அரு‌‌ந்திய தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

webteam

சிவகாசி அருகே மதுபானம் அருந்திய கூலித் தொழிலாளர்களில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுவில் விஷம் கலந்து அருந்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் 7 பேர் பராசக்தி காலனி அருகில் உள்ள அரசு மதுபானக் கடையில் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றதும் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். பதறிப் போன குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள சிவகாசி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன், கவுதம் மற்றும் முகமது இப்ராஹிம் உயிரிழந்தனர். 

உயிருக்குப் போராடி வரும் மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே, மதுவில் விஷம் கலந்து அருந்தியது தான், மூன்று பேரும் உயிரிழக்க காரணம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விஷம் அருந்தியதற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.