தமிழ்நாடு

ஆடையில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த அகோரிகள்

Rasus

சென்னை தியாகராய நகரில் உள்ள கோயிலுக்குள் ஆடை இல்லாமல் அகோரிகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தியாகராய நகரில் உள்ளது வெங்கட நாராயண பெருமாள் கோவில். இங்கு திடீரென ஆடைகளில்லாமல் அகோரிகள் நுழைந்ததால் அங்கிருந்த மற்ற பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலைமை ஏற்பட்டது. மேலும் ஏராளமான குழந்தைகளும் கோவில் இருந்ததால், உடனடியாக அகோரிகள் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.