தமிழ்நாடு

அதிமுக அவைத் தலைவர் தேர்வு: ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

kaleelrahman

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுசூதனன் மறைவையொட்டி அதிமுகவுக்கு புதிய அவைத் தலைவரை தேர்வு செய்ய தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு நவம்பர் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக பொதுக்குழுவை கூட்ட ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ள மனுதாரர், உட்கட்சி தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே அவைத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.