தமிழ்நாடு

பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்‌க புதிய குழு

பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்‌க புதிய குழு

rajakannan

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்காக 3 பேர் கொண்‌ட நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்காக சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் பெற்றதாகப் புகார் எழுந்தது. இதற்காக சுரேஷிடம் துணைவேந்தர் கணபதி 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 29 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தப் புகாரில், துணைவேந்தரின் வீடு மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதியை சஸ்பெண்ட் செய்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடவடிக்கை எடுத்துள்ளார். அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்காக 3 பேர் கொண்‌ட நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் நடந்த ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் இக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் தலைமையில் இக்குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிண்டிகேட் உறுப்பினர்களாக பேராசிரியர்‌கள் ஜெயக்கும‌ர் மற்றும் திருநாவுக்கரசு இடம்பெற்றுள்ளனர்.