பாலில் கலப்படம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதை நிரூபித்து காட்டுவதாக கூறிய அமைச்சர், கலப்படத்தை தடுக்க எடுத்துவரும் நடவடிக்கை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, பாலில் வேதிப்பொருட்கள் கலப்படம் செய்பவர்கள் மீது பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாக தெரிவித்தார்.