தமிழ்நாடு

பேச்சுவார்த்தைக்கு கனிந்து வரும் சூழல்: ஆயத்தமாகும் இரு அணிகள்

webteam

அதிமுக இரு அணிகளும் இணைவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளதாக ஓபிஎஸ் அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் தெரிவித்துள்ளனர்.

அதிமுக இரு அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான சூழல் கனிந்துள்ளதாக ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையிலுள்ள ஒபிஎஸ் இல்லத்தில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் அதிமுக அம்மா அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதி செய்யும் வகையில், எடப்பாடி பழனிசாமி அணி குழுவில் இடம்பெற்றுள்ள வைத்திலிங்கம் கூறுகையில், ’அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு நீங்கி இரு அணிகளும் விரைவில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அம்மா அணி இணைவதையே தொண்டர்களும் மக்களும் விரும்புகின்றனர். விரைவில் இரு அணிகளும் இணையும்’ என்று அவர் தெரிவித்தார்.