கடந்த 26ம் தேதி நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இந்நிலையில் அவரது உடல், கோயம்பேட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அருகில் இருந்த அவரது இரு மகன்களான சண்முகபாண்டியன், மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோரும் கண்ணீர்விட்டு அழுதனர். பிரேமலதா தனது மகனுக்கு ஆறுதல் சொல்லியகாட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.