தமிழ்நாடு

மதுரையில் மாடுகள் மீது ஆசிட் வீசிய கொடூரம் - சிகிச்சை இல்லாததால் காயங்களுடன் தவிப்பு

webteam

மதுரை மாவட்டத்தில் மாடுகளின் மீது அமிலம் வீசிய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரைமாவட்டம் சூர்யா நகர் பகுதியில் சுற்றித்திருந்த மாடுகள் மீது சிலர் அமிலத்தை வீசியுள்ளனர். அதில் காயமடைந்த மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடைத் துறை அதிகாரிகள் முன்வராததால், மாடுகள் தீக்காயங்களுடன் பரிதவித்து நிற்கின்றன.

இது குறித்து மக்கள் கூறும் போது, “ மாடுகளின் நிலைமை குறித்து தன்னார்வ அமைப்பு கால்நடை துறையினரிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆதலால் கால்நடைத்துறையினர் விரைந்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அத்துடன் மாடுகளின் அமிலம் வீசிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.