போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை  PT WEB
தமிழ்நாடு

ஓசூர்: வீட்டிற்குள் அழுகிய நிலையில் நிர்வாணமாகக் கிடந்த பெண் சடலம்; விசாரணையில் வெளிவந்த தகவல்

விமல் ராஜ்

கர்நாடக மாநிலம் எல்லையான அத்திப்பள்ளி அருகே உள்ள தலைமை ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 4வது தளத்தில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள் 4வது தளத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. பின்னர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, வீட்டின் படுக்கை அறையில் நிர்வாணமாக அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது.

நிர்வாணமாகக் கிடந்த பெண் சடலம்

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஒரிசாவைச் சேர்ந்த சப்பன் குமார் என்பவர், இங்கு வசித்து வந்ததும், அவருடன் உயிரிழந்த பெண் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர் போலீசார் சப்பன் குமார், செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான சப்பன் குமாரைத் தேடி வருகின்றனர்.