தமிழ்நாடு

சென்னையில் இன்று 1,992 பேருக்கு கொரோனா - இணைநோய் இல்லாமல் 8 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 1,992 பேருக்கு கொரோனா - இணைநோய் இல்லாமல் 8 பேர் உயிரிழப்பு

webteam
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நோய்த் தொற்று 4 ஆயிரத்தை நெருங்கப் போகிறது. மேலும் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 82,275  ஆக உயர்ந்துள்ளது. 
 
 
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,443 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,537 ஆக உயர்ந்துள்ளது. 
 
சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,992 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 53,762 ஆக உயர்ந்துள்ளது.
 
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 54 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 44 பேரும், தனியார் மருத்துவமனையில் 10 பேரும் உயிரஇதில் ஒரு குழந்தையும் 17 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர். இணைநோய் இல்லாத 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,079  பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.