தமிழ்நாடு

ராணிப்பேட்டை: வட்டார கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டல்; தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

JustinDurai

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டார கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மஞ்சம்பாடி தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த சிவராஜ் என்பவர் தம்மை தொலைபேசியில் ஆபாசமாக திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நெமிலி வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் ரமேஷ், விசரணை நடத்தி தலைமை ஆசிரியர் சிவராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.