புதுச்சேரியில் காதல் ஜோடி ஒன்று ஆழ்கடலில் திருமணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். ஆழ்கடல் பயிற்சியாளரான தீபிகா மற்றும் அவரது காதலர் ஜான் டி பிரிட்டோ ஆகியோர், கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், 50 அடி கடல் ஆழத்தில் திருமணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ்வாறு திருமணம் செய்துகொண்டது தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.