தமிழ்நாடு

இளநீர் பறிக்க சென்ற இருவர் மின்சாரம் தாக்கி பலி

webteam

திருவள்ளூர் அருகே இளநீர் பறிக்க சென்றவர் மின்சாரம் தாக்கிய உயிரிழந்தார். 

திருவள்ளூர் மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் உடல் நலக்குறைவுடன் இருக்கும் தனது தந்தைக்காக, உறவினர் விஸ்வநாதனுடன் இளநீர் பறிக்க வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது, தட்சணாமூர்த்தி இரும்பினாலான பைப் ஒன்றை வைத்து இளநீர் பறித்துள்ளார். 

தென்னமரத்தின் அருகே உயர்மின் அழுத்த கம்பம் இருப்பதை அவர் அறியவில்லை. இரும்பு பைப், உயர்மின் அழுத்த கம்பி மீது பட்டதில் தட்சணாமூர்த்தி மின்சாரம் தாக்கி எரிந்துள்ளார். அவரைக் காப்பாற்ற சென்ற அவரது உறவினர் விஸ்வநாதன் மீதும் மின்சாரம் பாய்ந்து அவரும் எரிந்துள்ளார். இதனை 100 நாள் வேலை செய்தவர்கள் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் பொன்னேரி காவல் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இருவரின் சடலங்களையும் மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இளநீர் பறிக்க சென்ற இருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.