தமிழ்நாடு

சிறுத்தை பூனை மர்ம மரணம் : வனத்துறையினர் விசாரணை

webteam

உதகையில் சிறுத்தை பூனை ஒன்று மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள தனியார் மருந்தாக்கியல் கல்லூரியின் பின்புறத்தில் உள்ள குமரன் நகரில் 2 வயது சிறுத்தைப் பூனை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதைக்கண்ட சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தைப் பூனையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அத்துடன் சிறுத்தைப் பூனை இறந்ததற்கான காரணம் என்ன ? யாரேனும் அதனை கொன்றுவிட்டார்களாக என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏனென்றால் அண்மையில் பலாமரங்களை சேதப்படுத்துகிறது என கரடி ஒன்றை விவசாயி ஒருவர் சுருக்கு வைத்துக்கொன்றது குறிப்பிடத்தக்கது.