தமிழ்நாடு

ஓஎம்ஆர் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

webteam

ஓ.எம்.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் ஐடி ஊழியர் விக்னேஷ்வரன் (33), இவர் தனது காரில், ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரபாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்ததால் காரை சர்வீஸ் சாலையில் நிறுத்தி காரில் இருந்து இறங்கியுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் கார் மளமளவென எரியத் துவங்கியது, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.