தமிழ்நாடு

75 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டை கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

webteam

75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டையில் உள்ள பிரபல பிரியாணி கடை ஒன்றில் இன்று முதலில் வரும் 75 நபருக்கு 75 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவதாக அறிவித்ததை அடுத்து அதனை வாங்க ஏராளமான மக்கள் குவிந்து போட்டி போட்டு குவிந்து பிரியாணியை வாங்கிச் சென்றனர்.

இன்று நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையின் கீழ இரண்டாம் வீதியில் செயல்பட்டு வரும் தொப்பி வாப்பா என்ற பிரபல பிரியாணி கடையில் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் இன்று முதலில் வரும் 75 நபர்களுக்கு 75 பைசாவிற்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து அந்த பிரியாணியை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனை அடுத்து முதலில் வந்த 75 நபர்கள் 50 பைசா மற்றும் 25 பைசா நாணயங்களை மொத்தமாக சேர்த்து 75 பைசாவாக கொடுத்து சிக்கன் பிரியாணியை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.