தமிழ்நாடு

மாட்டுக்கு மூவர்ண பெயின்ட் அடித்து சுதந்திர தின கொண்டாட்டம்

webteam

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் மாட்டுக்கு தேசத்தின் கொடியில் உள்ள மூவர்ண பெயின்ட் அடித்து விவசாயி ஒருவர் சுதந்திர தின விழாவை கொண்டாடியுள்ளார்.

நாடு முழுவதும் 72வது சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாப்பட்டது.  இந்நிலையில் கோவை குணியமுத்தூர் அருகே மணிகண்டன் நகரில்  வசிக்கும் அன்வர் என்பவர் தனது பாரம் சுமக்கும் இரண்டு வயது நாட்டு மாடுக்கு தேசத்தின் கொடியில் உள்ள மூவர்ணத்தை பெயிண்டாக அடித்து, வயிற்று பகுதியில் சக்கரம் போட்டு  அதன் கொம்பில் கொடியை செருகி சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.

குட்லீ  என்று பெயரிடப்பட்டுள்ள தனது நாட்டு மாடுயை வீட்டில் ஒருவர் போல் வளர்த்து வருவதால் இவ்வாறு செய்ததாக அன்வர் கூறுகிறார். நேற்று ஓரு நாள் மாட்டுக்கு ஒய்வு தந்ததாக தெரிவித்தார். தேசிய கொடி சின்னத்துடன் உள்ள மாட்டை அக்கபக்கத்தினர், சாலையில் செல்வோர்கள் படம் எடுத்தனர்.