தமிழ்நாடு

துப்பாக்கி முனையில் வங்கியில் 6 லட்சம் கொள்ளை

துப்பாக்கி முனையில் வங்கியில் 6 லட்சம் கொள்ளை

webteam

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. வாரத்தின் முதல்நாள் என்பதால் காலை முதலே வாடிக்கையாளர்கள் அதிகளவில் இருந்தனர். மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் வங்கியில் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. இந்த வேளையில் சுமார் 5பேர் கொண்ட கும்பல் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை காட்டி வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டியுள்ளனர்.  துப்பாக்கி முனையில் அவர்களை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிய அந்தக் கும்பல் வங்கியில் இருந்த ரூபாய் 6லட்சமும், வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 10 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை அந்தக்கும்பல் தாக்கியுள்ளனர். 

கொள்ளையர்கள் சென்ற பின் ஊழியர்கள் அறையை உடைத்துக்கொண்டு வெளியில் வந்துள்ளனர். இதன்பின்னர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல்துறை இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.