தமிழ்நாடு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 6 சிலிண்டர்: முதல்வர் அறிவிப்பு

webteam

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 6 சிலிண்டர் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அரசி அட்டைதாரர்களுக்கு ஒரு வருடத்திற்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பேசிய முதல்வர் “நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 200 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தப்படும். செய்யாறு அருகே வட இலுப்பையில் பாலாற்றில் 27 கோடி ரூபாயில் தடுப்பனை கட்டியது அதிமுக அரசு” என்றார்.