தமிழ்நாடு

தேவர் ஜெயந்தி விழாவில் போலீஸ் வாகனத்தில் நடனமாடிய 5 இளைஞர்கள் கைது

Veeramani

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அன்று கமுதி அருகே காவல்துறை, அரசு வாகனங்களின் மீது ஏறி நடனமாடிய 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் கடந்த மாதம் 30ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 114வது ஜெயந்தி விழா மற்றும் 54வது குருபூஜை விழா நடைபெற்றது.

29 மற்றும் 30ம் தேதிகளில்முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வந்த இளைஞர்கள்  அரசுத்துறை வாகனம், பேருந்துகளின் மீது ஏறி ஆட்டம் போட்ட  வீடியோ  சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் கமுதி போலீசார் cctv கேமராவில்  வாகனம் மீது நடனம் ஆடிய பதிவான வீடியோ காட்சி பதிவுகளை வைத்து பார்த்தில்  கல்லூரி மாணவர்கள் அஜய்குமார், கருப்புசாமி, வாசு ஆகிய 3 பேரும், அவர்களோடு  காளீஸ்வரன், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேரை கமுதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.