தமிழ்நாடு

''பயிற்சி முடிந்தது; இனி பணி தான்' - சென்னை ரயில்வே காவல்துறைக்கு புதிதாக 4 மோப்ப நாய்கள்!

''பயிற்சி முடிந்தது; இனி பணி தான்' - சென்னை ரயில்வே காவல்துறைக்கு புதிதாக 4 மோப்ப நாய்கள்!

webteam

சென்னை ரயில்வே காவல்துறைக்கு புதிதாக 4 மோப்ப நாய்கள் பணிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக ரயில்வே போலீசுக்கு துப்பறியும் மோப்பநாய் பிரிவு சென்னை அயனாவரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. ரயில்வே காவல்துறை துப்பறியும் மோப்ப நாய் பிரிவு, கடந்த 2002-ம் ஆண்டு முதன்முதலாக துவங்கப்பட்டது. இதில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 8 காவலர்கள் பணியில் உள்ளனர். முதலில் செல்லி மற்றும் டைசன் ஆகிய இரண்டு மோப்ப நாய்கள் ரயில்வே காவல்துறைக்கு வாங்கப்பட்டன.

இவை இரண்டும் வெடிகுண்டுகள் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை. இந்நிலையில் மோப்ப நாய் செல்லி கடந்த 2010ம் ஆண்டும் டைசன் 2011ம் ஆண்டும் இறந்து விட்டன. அதன் பிறகு ஜாக் மற்றும் ஜெஸ்சி ஆகிய வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் ரயில்வே காவல்துறைக்கு புதிதாக வாங்கப்பட்டன.

இவற்றில் ஜெஸ்சி 2019-ம் ஆண்டும், ஜாக் 2020-ம் ஆண்டும் உயிரிழந்து விட்டன. பெர்னி என்ற வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய் 2017-ம் ஆண்டு ரயில்வே காவல்துறைக்கு வாங்கப்பட்டது. மேலும் ரயில்வே காவல்துறைக்கு பாதுகாப்பு அலுவலுக்கு துப்பறியும் நாய்கள் தேவைப்படுவதால் 2020-ம் ஆண்டில் மார்ச் மாதம் ஏஞ்சல், ஆகாஸ் ஆகிய இரண்டு மோப்ப நாய்கள் போதை பொருட்களை கண்டுபிடிப்பதற்காக வாங்கப்பட்டன.

மேலும் சாரா என்ற மோப்ப நாய் குற்றச் செயல்களில்ஈடுபட்டோரை கண்டுபிடிக்கவும், சூர்யா என்ற மோப்ப நாய் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கவும் என மொத்தம் நான்கு மோப்ப நாய்கள் ரயில்வே காவல்துறைக்கு புதிதாக கொண்டுவரப்பட்டன.

இந்த 4 மோப்ப நாய்களுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை மாநகர மோப்ப நாய் பிரிவு படையில் பராமரிப்பாளர் மூலம் முறையாக ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன. பயிற்சி முழுவதுமாக முடிவடைந்த நிலையில்
நேற்று இந்த 4 மோப்ப நாய்களும் அதன் பயிற்சியாளர்கள் மூலம் ரயில்வே டிஜிபி

சைலேந்திரபாபுவிடம் ஆய்வுக்காகஅழைத்து வரப்பட்டன.சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்புத்துறை வளாகத்தில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு முன்பு மோப்ப நாய்கள் ஏஞ்சல், ஆகாஸ் சாரா, சூர்யா ஆகிய நான்கும் தாங்கள் பெற்ற  செய்து காண்பித்தன.இதனையடுத்து
4 மோப்ப நாய்களும் ரயில்வே காவல்துறைக்கு பணிக்கு ஒப்படைக்கப்பட்டன.