தமிழ்நாடு

மூச்சுத்திணறல்: சதுரகிரி கோயிலில் 4 பேர் உயிரிழப்பு

webteam

புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களில் நான்கு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்தக் கோயிலில் வருடம் தோறும் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக நடைபெறும். அதே போல இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா நேற்று நடைபெற்றது. இதனால், கடந்த 27 ஆம் தேதி முதல் இன்று வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் கோயிலுக்கு வந்திருந்த முருகேசன், ராஜசேகர், சுசீலா உள்பட நான்கு பேர் மூச்சு திணறி உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.