தமிழ்நாடு

சரக்கு வேனில் ரகசிய அறை... கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

Rasus

ஆந்திராவில் சினிமா பாணியில் சரக்கு வேனில் ரகசிய அறை அமைத்து செம்மரங்களை கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குக்கல் தொட்டி அருகே அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதி-கடப்பா சாலையில் வந்து கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 8 செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் ரகசிய அறை அமைத்து அதற்கு வெளியே தக்காளி கூடைகளை வைத்துள்ளனர். செம்மரங்களை கைப்பற்றிய காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செம்மரக்கட்டைகள் கர்நாடகாவிற்கு கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது.