தமிழ்நாடு

பிரதமர் மோடி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு: 3 பேர் கைது

webteam

ராமநாதபுரம் அருகே பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வீடியோவை வாட்ஸ் அப் மூலம் பரப்பியதாக 3 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்ட எஸ்.பி பட்டிணம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன்படி பாசிபட்டினத்தைச் சேர்ந்த சீனி (47) இப்ராகிம்(43) நைனார் பாத்திமா(46) ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.