தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு 

webteam

கிருஷ்ணகிரி அருகே ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி நாச்சிகுப்பம் அருகே கல்வாரி செப்பல் பகுதியில், ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். தனியார் விடுதியில் தங்கி படித்த மாணவிகள் அனுசுகா, சித்ரா, ஜெசுப்பிரியா, ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் நீர் நிலைகளில் மூழ்கி இதுவரை 10 சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.