தமிழ்நாடு

வடதமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் - வானிலை மையம்

webteam

வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், “மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம். மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம். அதேபோல தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்” எனத் தெரிவித்துள்ளார்.