தமிழ்நாடு

சாராய ஊறலைக் குடித்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Sinekadhara

கள்ளச்சாாரய ஊறலைக் குடித்து மயங்கி விழுந்த மூன்று மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், பெத்தநாயக்கன் குப்பத்தில் உள்ள ஏரிப்பகுதியில் பிளாஸ்டிக் குடத்தில் இருந்த ஊறலைக் குடித்த 3 மாணவர்கள், மயங்கி விழுந்துள்ளனர். மாணவர்கள் மயங்கிக்கிடந்ததைக் கண்டவர்கள், அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் ஊறல் போட்ட நபரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.