தமிழ்நாடு

பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் இருவருக்கு கொரோனா : மாவட்ட ரீதியில்..!

webteam

சென்னையில் இன்று 279 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2008 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 2008 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை காணலாம். செங்கல்பட்டு - 38, கடலூர் - 68, தருமபுரி - 1, திண்டுக்கல் - 7, கள்ளக்குறிச்சி - 38, காஞ்சிபுரம் - 1, மதுரை - 1, கிருஷ்ணகிரி - 2, பெரம்பலூர் - 1, தென்காசி - 1, தேனி - 5, திருவள்ளூர் - 18, திருச்சி - 1, விழுப்புரம் - 25, விருதுநகர் - 1, நாமக்கல் - 15, நீலகிரி - 4, சேலம் - 1, நெல்லை - 1 என கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.