தமிழ்நாடு

முழு ஊரடங்கின் முதல்நாளில் விதிமீறல்: சென்னையில் 2,409 வழக்குப்பதிவு

Sinekadhara

முழுப் பொதுமுடக்கத்தின் முதல்நாளில் விதிகளை மீறியதாக, சென்னையில் மட்டும் 2,409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நேற்றுமுதல் தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. ஊரடங்கு விதிகளை மீறினால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நீதிமன்றங்கள் மூலம் மட்டுமே திரும்பப் பெறமுடியும் என்றும் சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், முழுப் பொதுமுடக்கத்தின் முதல்நாளில் விதிகளை மீறியதாக, சென்னையில் மட்டும் 2,409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 1,805 வாகனங்களை சென்னை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.