அதிமுக பிரமுகர் வீட்டில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

ஆரணி | அதிமுக பிரமுகர் இல்லத்தில் 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

ஆரணி அருகே அதிமுக பிரமுகருக்கு சொந்தமான இல்லத்தில் சுமார் 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

PT WEB

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அதிமுக பிரமுகர் எம்சி ரவியின் இல்லத்தில் 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரவியின் அண்ணன் மகன் ரமேஷ் மீது ஏற்கனவே ஆந்திராவில் வழக்கு இருப்பதால், அவரை காவல்துறை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 50 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்நகர் கிராமத்தில் அதிமுக பிரமுகர் எம்சி ரவி என்பவரது வீட்டில் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் நடத்திய சோதனையில் 2 டன் (106) செம்மறிகட்டைகளை பறிமுதல் செய்தனர்..

கடந்த சில நாட்களாக ஜவ்வாது மலையிலிருந்து அமிர்தி வழியாக கண்ணமங்கலம் பகுதிக்குள் செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்து ஆந்திரா மாநிலத்திற்கு கடத்திச் செல்வதாக சிறப்பு புலனாய்வு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் கண்ணமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் சில தினங்களில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அந்தவகையில் இன்று அதிமுக மாவட்ட பிரதிநிதி எம்சி ரவிக்கு சொந்தமான வீட்டை போலீசார் சோதனை செய்தனர்.. அப்போது வீட்டிற்குள் சுமார் இரண்டு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர்..

காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அக்கம் பக்கத்தில் விசாரணை மேற்கொண்ட போது ரவி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வருவதாகவும், அந்த வீட்டை தற்போது அதிமுக பிரதிநிதி ரவியின் அண்ணன் மகன் ரமேஷ் என்பவர் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது..

மேலும் ரமேஷ் மீது ஏற்கனவே ஆந்திரா மாநிலத்தில் செம்மரக்கட்டை வழக்கு இருப்பதாக தெரியவந்ததன் அடிப்படையில், ரமேஷ் என்பவரை காவல் துறை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்த செம்மரக் கட்டைகளை சிறப்பு புலனாய்வுத் துறையினர் வனத்துறை மூல்ம் மதிப்பீடு செய்தனர், அப்பொழுது 106 கட்டைகள் சுமார் 2 டன் இருந்தது உறுதியானது. இதன் மதிப்பீடு சுமார் 50 லட்சம் இருக்கலாம் என வனத்துறையில் சந்தேகப்படுகின்றனர்.