தமிழ்நாடு

தமிழக விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு 2 படுக்கைகள் ஒதுக்கீடு

Sinekadhara

அரசு விரைவுப் பேருந்துகளில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் 2 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

படுக்கை வசதி கொண்ட அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கென இரண்டு படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு விரைவுப் பேருந்திலும் கீழ் வரிசையில் எண் ஒன்று மற்றும் நான்கில் உள்ள படுக்கை என இரண்டு படுக்கைகள் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இந்த படுக்கையில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு அதனை ஒதுக்கீடு செய்து தரவும், பேருந்து புறப்படும்வரை பெண்கள் முன்பதிவு செய்யவில்லையெனில் பொதுப் படுக்கையாக நடத்துநர் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விரைவுப் பேருந்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பலனளிக்கும் என நம்பலாம்.