தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக முதலமைச்சர் பழனிசாமியை பதவியிலிருந்து நீக்க, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் அதிமுக கொறடா ராஜேந்திரன், 19 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபால், எம்.எல்.ஏ ஜக்கையனை தவிர்த்து, 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 18 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபால் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ததை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலைவையில் இருப்பதாகக் கூறி, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.