எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
பருத்தித்துறை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறிக் இலங்கை கடற்படை கைது நடவடிக்கையை மேற்கொண்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை ஜூலை 6 ஆம் தேதி வரை காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.