தமிழ்நாடு

பேருந்துகளைச் சிறைப்பிடித்த 137 பேர் மீது வழக்குப்பதிவு

Rasus

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்திய 137 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பள்ளிப்பட்டு தாலுகாவிற்குட்பட்ட பொதட்டூர்பேட்டை பணிமனையிலிருந்து 12 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி, நேற்று பல பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்த காவல்துறையினர் 40 மாணவர்கள் உட்பட 137 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டிருந்த நிலையில், பேருந்துகளை சிறைப்பிடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.