134 எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளனர் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
‘என்னை கட்டாயப்படுத்தியதால் தான் ராஜினாமா செய்தேன்’ எனக் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதற்கு பின்னணியில் திமுக இருக்கிறது எனக் கூறினார். 134 எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளனர் என்றும் தமிழகத்தில் அடுத்த 4.5 ஆண்டுகளுக்கு அதிமுக நிலையான ஆட்சிதரும் எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.
முன்னதாக அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு அப்பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.