தமிழ்நாடு

எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் ரூ.13.08 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை

webteam

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் ரூ.13.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். கோவையில் 42, சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது. 11 மணிநேரமாக நடைபெற்ற சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.13.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும், நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள், தொழில் நிறுவனங்களின் பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 கோடிக்கான வைப்புத்தொகை ஆவணம், மாநகராட்சி தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. ஹார்டு டிஸ்க்குகள், முறைகேடு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.