பூண்டி ஏரியின் மொத்த அடியான 35 அடியில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 3,500 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
பூண்டி ஏரி திறக்கப்பட்டுள்ளதாக் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், தாமரைப்பாக்கம், புதுக்குப்பம், மணலி, எண்ணூர் பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.