தமிழ்நாடு

100 நாள் வேலை: சீமான் கருத்தில் நியாயம் இருக்கிறது - பாஜக தலைவர் அண்ணாமலை

kaleelrahman

தமிழகத்தில் அரசியலுக்காக காமராஜரை பயன்படுத்தி அவருக்கு எதுவும் செய்யவில்லை. அதனால் தான் பாஜக கையில் எடுத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர் தியாகி குமரனின் 118 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னிமலையில் அவர் வாழ்ந்த இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு பாஜக சார்பில் தமிழக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

தமிழகத்தில் அரசியலுக்காக காமராஜரை பயன்படுத்தி அவருக்கு எதுவும் செய்யவில்லை. அதனால் தான் பாஜக கையில் எடுத்துள்ளது. இதில், அரசியல் இல்லை. நீட்தேர்வை மக்கள் எதிர்க்கவில்லை. வெள்ளை அறிக்கை வெளியிட போவதாகவும் தெரிவித்த அவர், நீட்டை பொருத்தவரை ஆதாரப்பூர்வமான விவாதத்திற்கு பாஜக தயாராக இருப்பதாக கூறினார்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கொடுத்ததில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஊழல் நடந்திருக்கிறது. 100நாள் வேலை திட்டம் குறித்து சீமான் தெரிவித்திருப்பதில் நியாயம் இருப்பதாக தெரிவித்தார்.