தமிழ்நாடு

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் மலேசியாவுக்கு தப்ப முயன்ற போது தடுத்து நிறுத்தம்

webteam

டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சென்னையில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்ற 10 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மலேசியாவைச் சேர்ந்த 10 பேர் சுற்றூலா விசா மூலும் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் டெல்லி இஸ்லாமியர் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தென்காசியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் மலேசியாவுக்கு செல்ல முயன்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சென்னை விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது மொத்தம் 137 பேர் மலேசியாவுக்கு செல்ல முயன்றது தெரியவந்தது. அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் 10 பேர் மட்டும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை மலேசியா செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய போலீசார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர். இவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.