தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் - குடியரசு தலைவர் ஒப்புதல்

Sinekadhara

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

நீதிபதிகள் கண்ணம்மாள், சாந்திகுமார், முரளிசங்கர், மஞ்சுளா ராமராஜூ, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். மேலும், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் ஆகியோரையும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனால் உயர் நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது; மேலும் 12 காலியிடங்கள் உள்ளது.