தமிழ்நாடு

டியூசன் ஏன் போகவில்லை என திட்டிய அண்ணன்... தோழியுடன் மாயமான 10ம் வகுப்பு மாணவி..!

webteam

டியூசன் செல்லவில்லை என அண்ணன் திட்டியதால் தோழியுடன் மாயமான பத்தாம் வகுப்பு மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த கந்தன் மகள் பவித்ரா. அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மகள் சிந்து. இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை டியூசனுக்கு செல்லாததால் பவித்ரா அண்ணன் அவரைத் திட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த பவித்ரா அவரது தோழி சிந்துவிடம் நடந்ததை கூறியுள்ளார். பின்பு இருவரும் கடைக்கு சென்று வருகிறோம் என்று கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளனர். வெகுநேரமாகியும் மாணவிகள் இருவரும் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் தேட ஆரம்பித்தனர். இதையடுத்து காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.