தமிழ்நாடு

'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை கூறி மட்டும் கோஷங்கள் எழுப்ப வேண்டும்' - ஓபிஎஸ் அறிவுறுத்தல்

kaleelrahman

அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்களை மட்டுமே கூறி கோஷங்கள் எழுப்ப வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இன்று அவர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். சிறிது நேரம் கழித்து அவர் புறப்படும்போது அங்கு நின்ற பெண் தொண்டர்கள் சிலர் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.

அப்போது அவர்களை அழைத்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை வாழ்த்தியே கோஷங்களை எழுப்ப வேண்டும் என்றும் வேறு யார் பெயரையும் கூறி கோஷம் எழுப்பக் கூடாது எனவும் அறிவுரை வழங்கினார். இதையடுத்து எம்.ஜி.ஆர். வாழ்க அம்மா வாழ்க என தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.