தமிழ்நாடு

"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது" - சசிகலா

Veeramani

கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த பாரதி என்ற ஆதரவாளருடன் தொலைபேசியில் பேசியபோது இவர் அதனை கூறியுள்ளார்.

மேலும், அதிமுகவை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை தற்போதும் உள்ளது என்றும் அவர் கூறினார். சசிகலாவுடன் பேசியதாக சிலர் நேற்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சசிகலா பேசும் வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.