விளையாட்டு

யோ-யோ-வில் பாஸ் ஆகியும் யுவராஜ் சிங் அவுட்: ஏன்?

webteam

யோ-யோ டெஸ்ட்டில் யுவராஜ் சிங் தேர்வு பெற்ற பின்னும் அவர் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படவில்லை.

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு யுவராஜ் சிங், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறவில்லை. அவர் யோ-யோ என்ற உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால்தான் அணியில் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடந்த சில வாரங்களாக பயிற்சி பெற்ற 36 வயதான யுவராஜ் சிங், அந்த டெஸ்டில் பாஸாகியுள்ளார். இருந்தாலும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர், டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வில் அவர் பெயர் இடம் பெறவில்லை.

இதுபற்றி இந்திய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறும்போது, ’யுவராஜ் சிங்கிற்கு உடல் தகுதி பிரச்னை இருக்கிறது. அதோடு அவர் உள்ளூர் போட்டிகளில அதிகமாக விளையாடவில்லை. அதனால் அவர் தேர்வு பெறவில்லை’ என்றார்.