விளையாட்டு

பாராலிம்பிக்: வட்டு எறிதலில் வெள்ளி வென்றார் யோகேஷ் கத்தூனியா

jagadeesh

டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வட்டு எறிதலில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் வட்டு எறிதல் பிரிவுப் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா 44.38 மீட்டர் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.