விளையாட்டு

”ஊக்கமருந்து சர்ச்சையின் போது டிராவிட் போன் செய்து நம்பிக்கை கொடுத்தார்” - பிருத்வி ஷா

EllusamyKarthik

“நான் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய போது எனக்கு ராகுல் டிராவிட் போன் செய்து ஆறுதல் சொன்னார்” என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா. 

2019 இல் தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட காரணத்திற்காக எட்டு மாத காலம் கிரிக்கெட் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. 

“எனக்கு ராகுல் டிராவிட் சார் போன் செய்து ‘இது வாழ்க்கையில் சகஜமான ஒன்று. இதில் உன் தப்பு எதுவும் இல்லை. நிச்சயம் நீ வலுவான கம்பேக் கொடுப்பாய்’ என அப்போது எனக்கு ஆறுதல் சொல்லி இருந்தார். அது நன்றாக இருந்தது” என அவர் தெரிவித்துள்ளார். 

பிருத்வி ஷா வரும் 13 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.