விளையாட்டு

மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் பக்கத்தின் ப்ளூ டிக் நீக்கம்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நிர்வகித்து வரும் அவரது ட்விட்டர் பக்கத்தின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை அங்கீகரிக்க ‘ப்ளூ டிக்’ ஆப்ஷனை ட்விட்டர் நிறுவனம் கொடுத்து வருகிறது. 

தோனியை 8.20 மில்லியன் பேர் ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்ற நிலையில் அந்நிறுவனத்தின் இந்த செயல் முகம் வாட செய்துள்ளது. தோனி கடைசியாக கடந்த ஜனவரி 8-ஆம் தேதியன்று ட்வீட் செய்துள்ளார். அதன்பிறகு அவர் ட்வீட் ஏதும் பகிரவில்லை. 

ட்விட்டரின் இந்த செயலால் தோனிக்கு இப்போதைக்கு ட்விட்டரில் அதிகாரப்பூர்வ பக்கமோ அல்லது கணக்கோ இல்லை என உள்ளது.