விளையாட்டு

’குளோபல் டி20’ தொடரில் யுவராஜ் சிங் ஒப்பந்தம்!

webteam

'குளோபல் டி20 கனடா" தொடரின் இரண்டாவது சீசனில் விளையாட, யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் இவர் அறிவித்திருந்தார். அப்போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாக அவர் கூறியிருந்தார். அதற்கு அனுமதி அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அவர் சமீபத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு வாரியம் பதில் ஏதும் அனுப்பவில்லை. யுவராஜ் சிங் ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த அனுமதி தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கனடாவில் நடக்கும் ’குளோபல் டி20’ தொடரில் விளையாட யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு கனடா வீரர்களும் இடம் பெறுவார்கள். இந்த தொடரின் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் ‘டொரண்டோ நேஷனல்ஸ்’ அணிக்காக விளையாட யுவராஜ் சிங் ஒப்பந் தமாகியுள்ளார். இதை குளோபல் டி20 கனடா தனது அதிகாரப் பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.