விளையாட்டு

விஜய் சங்கர் டூ புஜாரா: இரண்டாவது நாள் ஏலத்தில் யாருக்கு எவ்வளவு தொகை? - முழு விவரம்!

கலிலுல்லா

இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் ஏலத்தில் எடுக்கபட்டனர் என்பது குறித்து பார்ப்போம்.

ஐபிஎல் இரண்டாவது நாள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். பஞ்சாப் அணி அவரை 11.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அவருக்கு அடிப்படை விலையாக 1கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே, பஞ்சாப், குஜராத் அணிகள் கடுமையாக போட்டிபோட்டன. முடிவில் பஞ்சாப் விலைக்கு வாங்கியது. தமிழக வீரர் விஜய் சங்கரை ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ். தென்னாப்ரிக்க வீரர் எய்டன் மார்க்ரமை 2 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இயான் மோர்கன், ஆரோன் ஃபிஞ்ச், சவுரப் திவாரி, புஜாரா, ஜேம்ஸ் நீஷம், கிறிஸ் ஜோர்டான், மார்னஸ் லபுஷேன் ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.